1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

துபாயில் தலைமறைவாகியுள்ள

'பதுவத்தே சாமர' உட்பட இரண்டு  போதைப்பொருள் கடத்தல்காரர்களை  நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு பிடியாணையை கோருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மையில் கிராண்ட்பாஸில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த மாதம் 25 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண்ணும்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

56 வயது பெண்ணும்  31 வயதுடைய அவரது உறவினரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாருக்கு பல உண்மைகளை வெளிக்கொண்டுவர முடிந்துள்ளது.

துபாயில் தலைமறைவாகியுள்ள 'பதுவத்தே சாமர' உள்ளிட்ட இருவரே  இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி