முன்னாள் சிறைச்சாலை
ஆணையாளர் எமில் ரஞ்சன் கல்கஹேவாவை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு வழங்கிய மரண தண்டனையிலிருந்து விடுவித்து உயர் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்று 5 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.