கடந்த போராட்டத்தின்போது
(அரகலய) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தன்னை பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்ததாக முன்னாள் நீதி அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால் பொதுஜன பெரமுனவின் ஒரு குழு அந்த வாய்ப்பை தனக்கு இல்லாமல் செய்ததாக அவர் கூறுகிறார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"இந்த நாட்டில் போராட்டம் நடந்தபோது, இந்த நாட்டை அமைதிப்படுத்தி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ 2022 மே 12 அன்று ஒரு தீர்மானத்தை எடுத்து, அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு அறிவித்தார்.
ஆனால் மொட்டுவைச் சேர்ந்த சிலர் ரணில் விக்கிரமசிங்கவை விரைவாக அழைத்துச் சென்று கோட்டாவுக்கு அழுத்தம் கொடுத்து பிரதமர் பதவியை அவருக்கு வழங்கச் செய்தனர் என்றார்.