ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா
நாளை (09) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்த அவர், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோரை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் இந்திய விஜயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், அவரது எதிர்கால அரசியல் ஆதரவு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கா அல்லது அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
யார் ஜனாதிபதியாக வந்தாலும் சரத் பொன்சேகாவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விரிசல் தொடர்ந்தும் நீடிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.