தேசிய மக்கள் சக்தியின்
செயற்குழு உறுப்பினர் கே. டி. லால்காந்தவை கைது செய்து விசாரணை நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு இன்று (08) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
காலிமுக போராட்டக்கார்களை பாராளுமன்றத்தை நோக்கி திசை திருப்ப முயற்சித்தமை தோல்வியடைந்த்தாக லால்காந்த தெரிவித்தமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், தாம் வெளியிடும் கருத்துக்களில் சிக்கல் இருப்பின் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு கடுகண்ணாவ பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த லால்காந்த தெரிவித்தார்.