ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறைக்கு புறம்பானது எனக் கருதியே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி விலக தீர்மானித்துள்ள இராஜாங்க அமைச்சர்கள் விபரம்;
டி. வி.சானக
தேனுக விதானகமகே
ஷசீந்திர ராஜபக்ஷ
அசோகா பிரியந்த
மொஹான் டி சில்வா
இந்திக்க அனுருத்த
பிரசன்ன ரணவீர
சிறிபால கம்பலத்