பாராளுமன்ற உறுப்பினர்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக பொன்சேகா கட்டுப்பணம் செலுத்தினார்.
"என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு நிறைய பேர் கேட்டுள்ளனர், மேலும் இலங்கை மக்களின் அழைப்பை ஏற்றுக் கொள்வதற்காக நான் காத்திருக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.