தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை
கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகள் முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்துச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு இன்று (09) அறிவிக்கப்படவிருந்தது.
ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிவிப்பது செப்டம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.