தத்தெடுக்கப்பட்ட மூன்று வயதுக்
குழந்தையைக் கொடூரமாக தாக்கிக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட திருமணமான இளைஞருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.என உத்தரவிட்டுள்ளது.
06.02.2019 அன்று அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யுமாறு பிரதிவாதி மனுதாரர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகளான சம்பத் டி. அபேகோன் மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இருகல்வத்த கெதர சேனாரத்ன என்ற காமினி என்பவருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.