பாதாள உலகக் குழுத் தலைவன்
கஞ்சிபான இம்ரானின் இருப்பிடம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கருத்து வெளியிட்டார்.
காஞ்சிபான இம்ரான் இருக்கும் இடம் எமக்குத் தெரியும் என்றும் அதை ஊடகங்களுக்கு வெளியிடமாட்டோம் என்றும் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் கூறினார்.
இம்ரானின் தலைமறைவு, இடம் தொடர்பில் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கஞ்சிபான இம்ரான் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் புலனாய்வு அமைப்புகள் கூறிய தகவல்கள் சரியானவை என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.