சுற்றுலாத்துறை அமைச்சில்
இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்களின் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன் அமைச்சர் அவர்கள் முன்னிலையில் இதனைத் தெரிவித்தார்.
சவால்களை ஏற்றுக் கொள்வது தனது வாழ்க்கையில் புதிய விடயம் அல்ல எனவும் நாட்டுக்கு தேவையானபோது அதனை தாம் செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்படும் நேரத்தில் தம்முடன் நின்று நாட்டுக்காக விசேட சேவையாற்றி நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவிய அமைச்சின் செயலாளர்கள் தலைமையிலான அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்தார்