1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்

முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதேபோன்று, எதிர்வரும் 29ஆம் திகதி வரை இடையூறு இன்றி தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (09) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். 

தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடுமாறு கோரி ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இதனைத் தெரிவித்தார்.
 
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
 
மனுதாரர் ஷானி அபேசேகரவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் குழு சமர்ப்பித்த அறிக்கையில், தனது சேவையாளரைக் கார் விபத்தின் மூலம் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார். 
 
இதன்படி தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார். 
 
அங்கு அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்தின் முன் உண்மைகளை முன்வைத்து மனுதாரரிடம் தனது வீட்டின் பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் நான்கு அதிகாரிகள் பயணத்துக்காகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இந்த 6 பேரும் ஆயுதம் ஏந்தியே பணிபுரிகின்றனர் என்று அரசு வழக்கறிஞர் கூறினார். 
 
அப்போது ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தமது கட்சிக்காரருக்கு எதிரான அச்சுறுத்தல்களின் தன்மையை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு போதுமானதாக இல்லை என தெரிவித்தார். 
 
பயணத்தின்போது பொலிஸ் மோட்டார் சைக்கிள் ஒன்று அவரது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போதிலும் அது விபத்தை தடுக்க போதுமானதாக இல்லை என ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார். 
 
இந்நிலையில், எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு  வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
மனுதாரரான ஷானி அபேசேகரவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபையின் பொலிஸ் குழு சமர்ப்பித்த இரகசிய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் சட்ட மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி