1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மணல் டிப்பர் சாரதி ஒருவரிடம்

2,000 ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (09) 8 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

20,000 அபராதமும் முறைப்பாடு செய்த  ரிப்பர் சாரதிக்கு 50,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

குறித்த தண்டனைக் காலத்தில் குற்றவாளியின் வாக்குரிமையை இரத்துச் செய்யுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

8 வருட சிறைத்தண்டனையை 4 வருடங்களில் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் எனவும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், நீண்ட விசாரணையின் பின்னர் இந்த உத்தரவு பிறக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி