கண்டியிலிருந்து மட்டக்களப்பு
நோக்கி சென்று கொண்டிருந்த லேண்ட்ரோவர் ரக வாகனம் மட்டக்களப்பு கரடியனாறு மரப்பாலம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவரில் மூவர் படுகாயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.