தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்
கட்சி மாறுவதை தடை செய்யும் சட்டம் இயற்றப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாலபேயில் நேற்று (09) இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சி மாறும் திறன் யாருக்கும் உண்டு, ஆனால் மக்கள் வாக்கு மூலம் ஒரு கட்சியில் இருந்து வந்து கட்சி மாற முடியாது என்றும், கட்சி மாற வேண்டுமானால் வேறு கட்சியில் இருந்து மக்கள் வாக்கு மூலம் வரலாம் என்றும் கூறினார்.
மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரை பதவி நீக்கம் செய்ய நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அந்த தீர்மானம் எடுக்கப்படும் வரை மக்களின் பணத்தை செலவிடப்பட்டமையை யாரும் பொறுப்பேற்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.