ஜனாதிபதி தேர்தலில் தான்
ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம். எல். ஏ. எம் ஹிஸ்புல்லாஹ் தமிழ் லீடர் இணையத்துக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியை வகிக்கிறேன். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எமது கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டேன். கட்சியின் தீர்மானங்கள், கட்டுக்கோப்புகளை மீறப் போவதுமில்லை.
எமது கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக ஒரு போதும் நான் செயற்பட போவதில்லை. தலைமைத்துவத்துடன் இணைந்து எமது முஸ்லிம் காங்கிரஸை கட்டி வளர்க்கும் பாரிய பொறுப்பை முன்னெடுத்துச் செல்வேன் என்றார்.