மவ்பிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி
வேட்பாளர் திலித் ஜயவீர போட்டியிலிருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுவது போலியானது என அக்கட்சி கூறுகிறது.
குறித்த செய்தி நேற்று (09) முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதுடன் சில தரப்பினர் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
19 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் அண்மையில் தமது ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவை அறிவித்துள்ளனர்.
இதேவேளை, உலகளாவிய சக்தி மூலோபாய வேலைத்திட்டத்தின் இரண்டாவது வரைவு இன்று (10) குருணாகலில் நடைபெறவுள்ளது.