இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில்
ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால் தனிப்பட்ட ரீதியில் மகிழ்ச்சியடைவேன் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அம்பாறையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவாலை ஏற்று இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றுள்ளார்.
'அதனால்தான் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் இந்த நேரத்தில் மொட்டுவால் வெற்றிபெற முடியாது.