ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை
பாதுகாக்க வேண்டும் என்று கூறிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் சாய்ந்துள்ளதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை யாருக்கும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அண்மைக்காலம் வரை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் இன்று கட்சி மாறியுள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் ஒன்றில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விபசசாரி போன்று விற்பனை செய்ய சிலர் தயாராகவுள்ளனர். ஆனால், ஸ்ரீலங்கா கட்சி விபசாரி அல்ல எனவும் அவர் அங்கு வலியுறுத்தினார்.
அரசியல் விபசாரிகள் ரணில் மற்றும் சஜித் அணிகளுக்குள் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.