9 இராஜாங்க அமைச்சர்கள்
உட்பட சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு நேரடியாக ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கட்சியுடன் இருக்கும் இராஜாங்க அமைச்சர்களில் மொஹான் டி சில்வா,அசோக பிரியந்த, இந்திக்க அனுருத்த, தேனுக விதானகமகே, டி.வி. சானக, பிரசன்ன ரணவீர, சிறிபால கம்லத் உட்பட பலரே இவ்வாறு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவாக கட்சியில் இருந்து விலகிய மேலும் இரு இராஜாங்க அமைச்சர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.