கொழும்பு துறைமுகத்தில்
நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் இன்று (11) அதிகாலை தீ பரவல் மற்றும் வெடிப்பு ஏற்பட்டதாக துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அங்கு செயற்பட்ட துறைமுக தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்ட துறைமுக ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தி அணைத்ததாகவும், தீயை அணைக்க முடியாவிட்டால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனினும் பொருட்களுக்கும் மற்றும் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.