தேசிய ஜனநாயக முன்னணியின்
ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ இன்று (11) அத்துருகிரியவிலுள்ள அவரது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால தரப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகியுள்ளதாக கட்சியின் உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிப்பவர் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்றை விஜயதாச நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.