வவுனியாவில் இன்று (11) இடம்பெற்ற
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டத்தின்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோது காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று இறுதியில் அமளி துமளியில் கூட்டம் நிறைவுபெற்றுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை
இதேவேளை, வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராகவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம் என தமிழரசுக்கட்சி கலந்துரையாடியுள்ளதாக கட்சயின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.