முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இவர், அரசியலமைப்பு சார் சட்டத்தரணியாக நாட்டிலும் சர்வதேசத்திலும் நன்கறியப்பட்ட ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.