எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளைப் பெறுவார் என Lanka Bizz இணையதளம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதி தேர்தலில் 34 சதவீத வாக்குகளை அவர் பெறுவார் என கூறப்படுகிறது.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 33 வீத வாக்குகளைப் பெறுவார் என்றும் அந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் நாமல் ராஜபக்க்ஷ 18 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 10 சத வீத வாக்குகளைப் பெறுவார் என்றும் குறித்த இணையதளம் குறிப்பிடுகிறது.
இது தொடர்பான கணக்கெடுப்புக்கு Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த பகுப்பாய்வுகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.