மதுரங்குளி நல்லந்தலுவ
பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கைகள் கட்டப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு காணியில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் பிள்ளைகள் அவ்வப்போது வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது
அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.