ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் பிரபா கணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசாத்திடவுள்ளது.
கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நாளை (13) செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் பிரபா கணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடபபடவுள்ளது.
மனிதநேய மக்கள் கூட்டணியில் பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகள் உட்பட பதிவு செய்யப்படாத கட்சிகளும் சிவில் அமைப்புகள் உட்பட மொத்தம் 28 அமைப்புகளின் தலைவர்களும் இந்த உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றனர்.