இளம் தம்பதியினர் தவறான
முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொட பிரதேசத்தில் வீடொன்றிலிருந்தே இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
29 மற்றும் 28 வயதுடைய கணவன் - மனைவியே உயிரை மாய்த்துள்ளனர்
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.