ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு
ஆதரவு வழங்குவதாக முன்னர் தெரிவித்த இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறைமுக இராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளார்.
நாளை (13) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெறும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளார்.
'சொக்கா மல்லி' என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர,பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவை ஆதரிக்கப் போவதாக அவரது பேச்சாளர் இன்று (12) தெரிவித்தார்.