ஐக்கிய குடியரசு முன்னணியின்
தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளார்.
இதற்கான உடன்படிக்கை நாளை (14) தலவத்துகொடை கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் கைச்சாத்திடப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த காலங்களில் ராஜபக்ஷக்கள் இல்லாத கூட்டணியை ஆதரிப்பதாக கூறினார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் தானும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.