(ஏ. எச்.சித்தீக் காரியப்பர்)
ஜனாதிபதித் தேர்தலில் தமது
கட்சி யாரை ஆதரிக்கும் என்பது தொடர்பில் திட்டமிட்டபடி நாளை 14 ஆம் திகதி எமது கட்சி இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் கடந்த உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கட்சி யாரை ஜனாதிபதித் தேர்லில் ஆதரிப்பது என்பது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் கருத்துக்களைப் பெற்றுள்ளோம்
அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களை நாளைய உயர்பீடக் கூட்டத்தில் முன்வைத்து ஒரு தீர்மானத்துக்கு வரவுள்ளோம்.
நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ள உயர்பீடக் கூட்டத்தில் எம்மால் எடுக்கக் கூடிய தீர்மானத்தை ஊடகங்களுக்கும் உடனேயே அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.