ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு
ஆதரவாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி மற்றும் முன்னாள் அமைச்சரின் நெருங்கிய உறவினர்களுடன் நேற்று (12) இரவு பாணந்துறை பிரதேசத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (13) கொழும்பு கங்காராம விஹாரையில் சமய வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ராஜித சேனாரத்னவும் ஒருவராவார்.