எட்டாம் வகுப்பில் கல்வி கற்கும்
பாடசாலை மாணவி ஒருவரை இரண்டு ஆண்டுகளாகக் கூட்டு பலாத்காரம் செய்தமை தொடர்பில் பஸ் நடத்துனர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை, ஹொரண ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவரும், தியகம பிரதேசத்தில் வசிக்கும் மூவரும. கமாணவியை வீடொன்றில் தங்கியிருக்க ஆதரவளித்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பணம் மற்றும் பொருட்களை கொடுத்து ஏமாற்றி, சுமார் இரண்டு ஆண்டுகளாக மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் பலாத்காரத்துக்கு ஆளாக்கியமை தெரிய வந்தது.