அதுருகிரிய பிரதேசத்தில்
இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் அவரது கணவர் கிளப் வசந்த உயிரிழந்தமை தொடர்பில் அவர் நேற்று முன்தினமே தெரிந்து கொண்டார் எனவும் இதனால் அவர் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும் தற்போது மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதுருகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்கு சென்றிருந்த போது கிளப் வசந்தவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அங்கு அவரும் மற்றொரு நபரும் உயிரிழந்தனர்.
மேலும், கிளப் வசந்தவின் மனைவியும், பிரபல பாடகியுமான கே.சுஜீவா உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மூன்று சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
அங்கு, அவரது மார்பில் இருந்த தோட்டாக்களை அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்