ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
தலைமையிலான புதிய கூட்டணி உட்பட பல முற்போக்கு இடதுசாரி அரசியல் கட்சிகள் இன்று (14) ஐக்கிய முன்னணியுடன் கூட்டணிக்குள் நுழைந்துள்ளன.
இது தொடர்பான வைபவம் பத்தரமுல்லையில இடம்பெற்றது.
புதிய கூட்டணிக்கு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன செயலாளராகவும் பொருளாளராக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ ஆகியோர் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் பதவிகளை வகிக்கின்றனர்.
21 உறுப்பினர்களைக் கொண்ட தலைமைக் குழுவும் இதில் அடங்கும்.