ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்று (14) கையொப்பமிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இது இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா கட்டுப் பணத்தை வைப்புச் செய்திருந்தார்.
அவர் கடந்த ஜூலை 26ஆம் திகதி காலை தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவுக்கான கட்டுப் பணத்தை வைப்பிலிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி முதன்முறையாக ஜூலை 27ஆம் திகதி காலியில் நடைபெற்ற காலி மாவட்ட மக்கள் மாநாட்டில் தெரிவித்தார்.