1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாடசாலை மாணவி ஒருவர் பலாத்காரம்

செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனமல்வில தேசிய பாடசாலை அதிபர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு வெல்லவாய மாவட்ட நீதிவான்  உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட அதிபர், பிரதி அதிபர், ஆலோசனை ஆசிரியர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியர் ஆகியோரே.
 
சாட்சிகள் மீது எவ்விதத்திலும் செல்வாக்கு செலுத்தக் கூடாது எனவும், அவ்வாறான சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டால், பிணை இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவர் எனவும் பிணை வழங்கிய நீதிவான் மேலும் தெரிவித்தார்.
 
பாடசாலையில் கடமையாற்ற வேண்டும் என்பதற்காக அதிபர் உட்பட மூவருக்கும் விளக்கமறியல்  விதிக்கப்படவில்லை எனவும் நீதிவான் தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி