ஐக்கிய இலங்கை பொதுஜன
பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 3 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட ஐக்கிய இலங்கை பொதுஜன பெரமுனவின் செயலாளர் உள்ளிட்ட சிலர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (14) கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க செய்த முறைப்பாட்டிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.