ஹிக்கடுவை நகரில் முச்சக்கர வண்டி
சாரதி ஒருவரை சுட்டுக் கொல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
ரி-56 துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (14) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டபோது, அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது முச்சக்கர வண்டி சாரதி ஓடி ஒளிந்து கொண்டுள்ளார்.
குறித்த இடத்தில் T56 ரக துப்பாக்கி ரவை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.