மியான்மாரின் மியாவாடியில்
உள்ள சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 பேரில் 20 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும தெரிவிக்கையில் விடுவிக்கப்பட்டவர்கள் எல்லைப் பகுதி ஊடாக தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளார்.