புதிய ஜனாதிபதியாக அநுரகுமார
திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (22) இரவு தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பிரதமரின் இராஜினாமாவுடன், தற்போதுள்ள அமைச்சர்கள் குழுவும் இரத்து செய்யப்படும்.
எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.