கொழும்பு மாளிகாவத்தை,
ஸ்ரீசதர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று (22) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன் நின்றிருந்த நபர் ஒருவரே சுடப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதுடன், அவர் தெஹிவளை சோல் பீச் ஹோட்டலின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.