தெற்கு லெபனானில் உள்ள
ஹிஸ்புல்லா இலக்குகளை நோக்கி இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 35 குழந்தைகளும் 58 பெண்களும் அடங்குவதாக லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 1,645 பேர் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களால் காயமடைந்துள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள் சுமார் 1,300 ஹிஸ்புல்லா இலக்குகளை அழித்ததாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.
ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசியதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.