ஐக்கிய தேசியக் கட்சியினால்
அமைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற அரசியல் பீட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அடுத்த பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், அது தொடர்பான அரசியல் செயற்பாடுகளை கீழ் மட்டத்திலிருந்து திட்டமிட வேண்டும் என அவர் அங்கு தெரிவித்தார் .
மேலும், வலுவான கட்சியாக எழுந்து நிற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் அதிகார சபையை அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .
மேலும், நாடாளுமன்றத்தில். கைப்பற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார் .