பாராளுமன்றத்தை இன்று (24)
நள்ளிரவு முதல் கலைக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
அதன்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளது.
புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடுகிறது.