ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரால்
இஸ்ரேல் மீது ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலான் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் ஷெல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி அழித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வப்போது நடைபெறும் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு சமிக்ஞை மணி ஒலிக்கும் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.