இடமாற்றம் தொடர்பான வைபவத்தை
முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மனைவியும் கணவனும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று (25) மாலை அக்குரஸ்ஸ - சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபாகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் பிடபெத்தர - மெதிரிபிட்டிய பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பிடபெத்தரவிலிருந்து அதிவேகமாக சென்ன சொகுசு வேன் ஒன்று அவர்கள் மீது மோதியதுடன் அருகில் இருந்த மண் குவியலில் மோதி விபத்துக்குள்ளானது.
உயிரிழந்த இருவரும் மாகந்துர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்த ஆசிரியை 28 வயதானவராவார் மற்றும் அவரது கணவர் இந்திக சம்பத் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஆசிரியையின் சடலம் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதுடன், கணவரின் சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்தவர் கர்ப்பிணி தாய் என்பதும் தெரியவந்துள்ளது.