நாங்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அது அமெரிக்காவோ, இலங்கையோ அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தீர்மானிப்பது அரசாங்கமல்ல.
இது என்னுடையது,உங்களுடையது தேர்வு
எங்களது ஞானம் இரக்கம், மற்றும் புரிதல் ஆகியவை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டியவை அல்ல. நம் இதயங்களை திறக்கும் மாற்றத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தக்கூடாது.
நாங்கள்தான் அதைத் தேர்ந்தெடுப்பவர்கள்
நாங்கள் எங்கள் முகவர்களை தேர்வு செய்கிறோம். அவர்கள் அரசாங்கத்திற்கு கொண்டு வரும் குணநலன்களுக்கு நாங்கள் பொறுப்பு.அவர்கள் எப்படிப்பட்ட தனிநபர்களாக மாறுகிறார்கள் என்பதற்கு நாங்கள் பொறுப்பு. அவர்களின் தன்மை செல்வாக்குக்கு நாங்களே பொறுப்பு.
எங்கள் தேர்வுகள் அரசாங்க அணுகுமுறைகள், செயல்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்களை வழிநடத்துகின்றன.
சிறந்த அரசாங்கமும் சிறந்த சமத்துவமும் பெற நாம் சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டும்.
எங்கள் பலங்களும் பலவீனங்களோடும் நாம் ஒருவருக்கொருவர் நடந்துகொள்வதோடு, நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளிடமும் பிரதிபலிக்கின்றன.
சாதாரண குடிமக்களாகிய நாம் திறந்த, மரியாதைக்குரிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு உலக கலாச்சாரத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட முடியும், மேலும் சிறப்பாக மாற்ற முடியும். அறியாமைக்கும் தப்பெண்ணத்திற்கும் இடமளிக்காமல், உண்மையான சுதந்திரம் நிலவுவது ஒரு உலக கலாச்சாரம்.
இந்த பயணத்தில் நாம் தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்க வேண்டும்.
இன்று நமது தெரிவுகள் நம் குழந்தைகள் நாளை பெறும் உயரிய கலாச்சாரத்தை தீர்மானிக்கும்.
நாம் நம் வாழ்க்கையைப் பற்றி பெருமிதம் கொள்ள விரும்பினால், நம் குழந்தைகள் நமது பாரம்பரியத்தை முன்னேற்றுபவர்களாக இருக்க வேண்டும் அதுவே எமக்கு பெருமை.
நாங்கள் , நமக்காகவும் நமது குழந்தைகளுக்காகவும் ஒருவருக்கொருவர் கேட்போம்.
குமார் சங்கக்காரவின் டுவிட்டர் செய்தியை srilankabrief.org இன் சிங்கள மொழிபெயர்ப்பிலிருந்து
அமெரிக்கன் சிவில் போராட்டத்தின் நிலைகள்: