நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது அரசியலைப் பயன்படுத்தி வருகிறார்.
இது தொடர்பாக சுய விமர்சன பகுப்பாய்வொன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா காலப்பகுதியின் போது அவர் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் தலையீடுகள் குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தி வந்ததாகவும், அவ்வப்போது அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நா. உ மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெருவதற்கு இவை காரணமாக இருக்கலாம் என்று அறியக்கிடைகின்றது.
அந்த அறிக்கையின் படி பௌத்த தத்துவம் மற்றும் நாட்டில் அரசியல் தலைவர்களின் பயன்பாடு குறித்து நீண்ட ஆய்வு நடத்தி வரும் மங்கள, முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் என்று கூறியுள்ளார்.
'' இந்த நாட்களில் மங்களவின் அரசியல் ஹீரோவாக இருப்பவர் சேர் ஜோன் கொத்தலாவல என்று முன்னால் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
டபிள்யூ சேனநாயக்க 1953 இல் ஹர்த்தால் ஆட்சேபனைகளை எதிர்கொண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அக்டோபர் 12, 1953 அன்று இலங்கையின் மூன்றாவது பிரதமரான ஜோன் கொத்தலாவல 1956 வரை பதவியில் நீடித்தார். அவர் செப்டம்பர் 3, 1980 அன்று காலமானார்.