பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை குறிக்கும் வகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்போது பல்வேறு வேறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது
இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட நிகழ்ச்சி இன்று (14) மு.ப. 9 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையிலிருந்து ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கான வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவை ஊக்குவித்து வருவதாகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (எஸ்.எல்.பி.சி) இந்த நிகழ்ச்சிகளை நடாத்தி அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிடம் சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான பிரச்சாரம் (CaFFE) புகார் அளித்துள்ளது.